2
Thu
Thu
ஈராக் போர் முடிந்தது; அடுத்த இலக்கு அல்-காய்தா: ஒபாமா பிரகடனம்
வாசிங்டன், செப். 2-
அமெரிக்க படைகளுக்கு ஈராக்கில் வெற்றி கிடைத்துள்ளது, இதற்கு அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-காய்தா பயங்கரவாதிகளை ஒடுக்குவதே முக்கியக் குறிக்கோள்...
விடுதலைப் புலிகள் கட்டிய பங்கர்களைப் பார்வையிட்ட நிரூபமா ராவ்
கொழும்பு, செப். 1-
இலங்கை சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தமிழர் தாயகப் பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
இந்தியச் செய்திகள் (World Top Stories)
-
பாகிஸ்தானில் ஷியா ஊர்வலத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள்: 28 பேர் பல் 180 பேர் காயம் - லாகூர், செப். 2-
பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஊர்வலத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் 28 பேர் பலியானார்கள், 180 பேர் காயமடைந்தனர்... -
தீவிரவாதிகள் தாக்குதல் மிரட்டல் எதிரொலி: இந்தியா வரும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை - மெல்போர்ன், செப். 1-
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி மற்றும் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. -
ஷார்ஜாவில் தவிக்கும் 800 இந்தியர்கள்: வேலையின்றி பட்டினியால் வாட்டம் - ஷார்ஜா, செப். 1-
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஒரு பொறியியல் கம்பெனியில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியமே தரவில்லை என்றும், இதனால் அந்த கம்பெனியின் தொழிலாளர் முகாம்களில் வசிக்கும் 800 இந்திய தொழிலாளர்கள் உணவின்றித் தவிக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. -
வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடை - வாசிங்டன், செப். 1-
வட கொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. -
இலங்கை அதிபர் பதவி: ராஜபட்சவுக்கு ஆதரவாக சட்டத் திருத்தம் - கொழும்பு, ஆக. 31-
இலங்கை அதிபராக ராஜபட்ச 3-வது முறையாகத் தொடர்வதற்கு வழி செய்யும் சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது... -
இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் - கே.பி. வேண்டுகோள் - கொழும்பு, ஆக. 31-
மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து, கஷ்டப்படும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்யுங்கள் என... -
இந்தோனேசியாவில் 400 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு எரிமலை சீற்றம் - ஜகார்த்தா, ஆக. 30-
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் உள்ள சினாபுங் என்ற எரிமலை 400 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குமுறத் தொடங்கியது... -
7 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் சிக்கினர் - லண்டன், ஆக. 30-
இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் லார்ட்சில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டின் போது நோ-பால் வீசுவதற்கு ரூ.1 கோடிக்கும் மேல் லஞ்சமாக... -
நியூசிலாந்து நீதிமன்றத்தின் துணிச்சலான தீர்ப்பு: விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் அமைப்பு - வெலிங்டன், ஆக. 30-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை... -
இந்திய உதவியை ஐ.நா. மூலமாக ஏற்க பாகிஸ்தான் முடிவு - இஸ்லாமாபாத், ஆக. 30-
வெள்ள நிவாரணப்பணிக்கு இந்தியா கொடுக்கும் நிதி உதவி ஐ.நா. அமைப்புகள் மூலம் ஏற்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.... -
தீவிரவாதிகள் மிரட்டியதால் அமெரிக்க அதிகாரி பாகிஸ்தானை விட்டு வெளியேறினார் - வாசிங்டன், ஆக. 29-
சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி என்ற அமெரிக்க உதவியின் நிர்வாகியாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர் ராஜீவ் ஷா இருக்கிறார். -
ஒசாமா பின்லேடன் சிஐஏ ஏஜென்ட்: பிடல் காஸ்ட்ரே - ஹவானா, ஆக. 29-
ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த காலத்தில் அவரால் சிஐஏ ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டவர்தான் ஒசாமா பின்லேடன். இது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன என்று கியூப தலைவர் பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். -
இலங்கையில் யுத்தம் முடிந்தும் பல கேள்விகளுக்குப் பதிலில்லை: ஜோன் ஹோம்ஸ் - நியூயார்க், ஆக. 28-
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகள் பதில் காணப்படாமல் எஞ்சியிருப்பதாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளரும், அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் கூறியுள்ளார். -
இலங்கைத் தமிழர் மறுகுடியமர்வில் கவனம் செலுத்த வேண்டும்: ரங்கராஜன் எம்.பி. - கொழும்பு, ஆக. 28-
இலங்கையில் நிவாரண முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்வு செய்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். -
ஜனவரியில் கைது செய்யப்பட்ட அமெரிக்கரை விடுவித்தது வடகொரியா - வாசிங்டன், ஆக. 28-
கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்ட அமெரிக்கரை வடகொரியா விடுதலை செய்ததற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. -
வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு செல்ல இனி விசா தேவை - கொழும்பு, ஆக. 28-
வெளிநாட்டவர்கள் இனிமேல் இலங்கைக்கு செல்ல விசா தேவை என்று இலங்கை அறிவித்துள்ளது. -
நடுவானில் விமானத்துக்கு ஆபத்து என்ற அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி - லண்டன், ஆக. 28-
நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்துக்கு ஆபத்து என்ற அறிவிப்பு ஒலித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானி தவறான பட்டனை அழுத்தியதே இதற்கு காரணம். -
பாகிஸ்தானில் ராணுவ தளபதியின் மருமகன் கடத்தல் - லாகூர், ஆக. 28-
பாகிஸ்தானில் ராணுவ தளபதியின் மருமகனை எட்டுபேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றுள்ளது. -
கே.பியிடம் பணம் உள்ளவரை அவருக்கு உயிர் ஆபத்து இல்லை: ஜே.பி.பி. - கொழும்பு, ஆக. 27-
கே.பி.யிடம் கப்பல்களும், பணமும் இருக்கும்வரை அவரது உயிருக்கு அரசால் எதுவித ஆபத்தும் ஏற்படாது என்று ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. அநுரகுமார திஸாநாயக்க நேற்றுக் கூறினார். -
கனமழை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவில் மக்கள் கடும் அவதி - கிளிநொச்சி, ஆக. 27-
இலங்கையில் பலத்த மழை பெய்து வருவதால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதியில் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். -
பார்வையிழந்தோர் பார்வை பெற செயற்கை கார்னியா கண்டுபிடிப்பு - ஒட்டாவா, ஆக. 27-
பார்வையற்றோருக்கு புது நம்பிக்கையூட்டும் வகையில், புதிய செயற்கை கார்னியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப் பொருத்துவதன் மூலம் இழந்த பார்வையைத் திரும்பப் பெற முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். -
ரஷ்யாவுக்காக அமெரிக்காவில் உளவு பார்த்த நோபல் பரிசு விஞ்ஞானி - லண்டன், ஆக. 27-
இங்கிலாந்தை சேர்ந்தவர் மயுரிர் வில்கின்ஸ் கடந்த 1962-ம் ஆண்டு இவர் நோபல் பரிசு பெற்றார். இந்த நிலையில் இவர் குற்றவாளி என்றும், ரஷ்யாவுக்காக அமெரிக்காவில் உளவு பார்த்ததாகவும் இங்கிலாந்து உளவுத்துறை தற்போது அறிவித்துள்ளது. -
தாய்லாந்தில் பொம்மைகளுடன் சேர்த்து புலிக்குட்டியை கடத்த முயற்சி - பாங்காக், ஆக. 27-
தாய்லாந்தில் பொம்மைகளுடன் சேர்த்து புலிக்குட்டியை கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். -
அணு மசோதா நிறைவேற்றம் மன்மோகன் சிங்குக்கு கிடைத்த வெற்றி: அமெரிக்க ஊடகங்கள் - வாசிங்டன், ஆக. 27-
அணு விபத்து இழப்பீட்டு மசோதாவை நிறைவேற்றியுள்ளது பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அரசியல் ரீதியில் கிடைத்த வெற்றி என்று அமெரிக்க பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன. -
பாகிஸ்தானில் நிவாரணப்பணியில் ஈடுபட்டு உள்ள வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்த சதி - வாசிங்டன், ஆக. 27-
பாகிஸ்தானில் வெள்ள நிவாரணப்பணியில் ஈடுபட்டு உள்ள வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.








