Vishal going to seek peace
இமயமலை சென்றார் விஷால்
(03 Jul 2009)
Enter Your Comments



அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போன விஷால், மன அமைதிக்காக இமயமலை சென்றிருக்கிறார். சத்யமும், தோரணையும் தோல்வியடைந்தது எப்படி என்று தீவிர ஆராய்ச்சியில் இருந்த விஷாலுக்கு, மனஅமைதி கிடைக்க இமயமலை டிரிப் ஐடியா கொடுத்தது ஸ்ரேயாதானாம். சமீபத்தில்தான் ஸ்ரேயா இமயமலை போய் திரும்பியிருக்கிறார். இந்த விஷயத்தை பத்திரிகை வழியாக தெரிந்துகொண்ட விஷால், ஸ்ரேயாவிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். ஸ்ரேயாவும் தனது அனுபவங்களை மடைதிறந்த வெள்ளமாக கொட்டி தீர்த்துள்ளாராம். உடனே விஷாலும் இமயமலை ட்ரிப்புக்கு தயாராகிவிட்டார். கடைசியாக விஷால் தயாரித்து நடித்த சத்யம், தோரணை படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இப்படங்கள் தெலுங்கில் ரிலீசாகி, அங்கும் ஓடவில்லை. இந்நிலையில் விஷால், மன அமைதிக்காக இமயமலை சென்றிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அங்கிருந்து திரும்பியதும் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தை திரு இயக்குகிறார். இவர் அகத்தியனின் மருமகன் ஆவார். இமயமலை பயணமாவது விஷாலுக்கு வெற்றியைத் அள்ளித்தரட்டும்!

 
மேலும் துணுக்குகள்

Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link