காசி, என் மனவானில், சாது மிரண்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை காவ்யா மாதவன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிஷால் குவைத்தில் பணியாற்றி வந்தார். இதனால் திருமணத்துக்கு பிறகு நிஷாலும், காவ்யா மாதவனும் குவைத் சென்று குடும்பம் நடத்தினர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவரை பிரிந்து காவ்யா மாதவன் மீண்டும் கேரளா வந்தார். சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில் தன்னையும், தனது குடும்பத்தினர் பற்றியும் காவ்யா மாதவன் அவதூறாக பேசி வருகிறார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி காவ்யா மாதவனுக்கு நிஷால் வக்கீல் நோட்டீசு அனுப்பினார். கணவர் நோட்டீசு அனுப்பிய நிலையில் காவ்யா மாதவன் விவகாரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். மேலும் எர்ணாகுளம் முதல் வகுப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவையும் அவர் தாக்கல் செய்தார். அதில் நிஷால் சந்திராவும், அவருடைய குடும்பத்தினரும் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினர். குவைத்தில் தனிக்குடித்தனம் நடத்தியபோதும் இந்த கொடுமை தொடர்ந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். கல்யாணத் தேதியோட, டைவர்ஸ் தேதியையும் முடிவு பண்ணிட்டுத்தான் கல்யாணமே பண்ணுவாங்க போல!