பிருத்விராஜ், நரேன், ஜெயசூர்யா ஆகிய மூன்று கதாநாயகர்களும் இணைந்து நடித்துள்ள ஒரு புதிய படத்துக்கு, "நான் நினைத்ததை முடிப்பவன்" என்று முன்பு பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இந்த படத்தின் பெயர் இப்போது, "ஏடிஎம் திருடன்" என்று மாற்றப்பட்டுள்ளது. இதில், போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து வங்கிகளில் கொள்ளையடிப்பவராக பிருதிவிராஜும், சி.பி.ஐ. அதிகாரியாக நரேனும், போலீஸ் அதிகாரியாக ஜெயசூர்யாவும் நடித்துள்ளனர். நவீன தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் பிஜுமேனன், பாவனா, சம்விருதா சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். ஜோஷி இயக்கியுள்ளார். கதை-திரைக்கதையை சச்சி-சேது எழுத, ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதியிருக்கிறார். எம்.ஜெயசந்திரன் இசையமைக்கிறார். ஷாஜி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஆனந்தா விஷன்ஸ் சார்பில் பி.கே.முரளிதரன், சாந்தா முரளி ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.