பெருமாள்முருகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு விருது: மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

பெருமாள்முருகனுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘ஆளண்டாப்பட்சி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு விருது வென்றுள்ளதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

மண்ணோடு இயைந்த மொழிவழக்கைக் கொண்டு எழுதும் பெருமாள்முருகனின் ‘ஆளண்டாப்பட்சி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘FireBird’, ‘JCB Prize For Literature’ எனும் உயரிய விருதை வென்றிருப்பது அறிந்து மகிழ்கிறேன். பெருமாள்முருகனுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள்!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.